ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் காஷ்மீர் பிரச்னை குறித்து துருக்கியின் அதிபர் எர்டோகன் பேசியது முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல’ என்று இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக பொதுச்சபை கூட்டத்தில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களின் உரை, வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, மாநாட்டில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்திய பிரதமர் மோடியின் உரை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை, துருக்கி அதிபர் ரிசெப் தயீப் எர்டோகனின் பேச்சு வெளியிடப்பட்டது.அதில் பேசிய எர்டோகன், “தெற்காசியாவின் அமைதிக்கு முக்கிய காரணியாக இருக்கும் காஷ்மீர் பிரச்னை, தற்போதும் முக்கிய பிரச்னையாக மாறி உள்ளது. குறிப்பாக, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இந்த பிரச்னை மிகவும் சிக்கலாகி விட்டது. ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களுக்கு உட்பட்டு, பேச்சுவார்த்தையின் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,’’ என்றார். துருக்கி அதிபரின் இந்த பொறுப்பற்ற பேச்சிற்கு இந்தியாவுக்கான ஐநா.வின் நிரந்தர தூதர் திருமூர்த்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்தார். `இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் துருக்கி தலையிடுவது, முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. பிற நாடுகளின் இறையாண்மையை மதிக்க, துருக்கி முதலில் கற்று கொள்ள வேண்டும். துருக்கி முதலில் தனது நாட்டின் கொள்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது,’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…