இந்திய எல்லையில் பிடிபட்ட தீவிரவாதிகளுடன் ஒரு டி.எஸ்.பி போலீஸ் அதிகாரி! ‘பகீர்’ பின்னணி!

Published by
மணிகண்டன்
  • காஷ்மீர் மாநில எல்லை பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ உள்ளதாக உளவுத்துறைக்கு எச்சரிக்கை தகவல் கிடைத்தது.
  • அதன்படி நடைபெற்ற சோதனையில் சந்தேகப்படும் படியாக 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் ஜனாதிபதி விருது வாங்கியவர் டி.எஸ்.பி அதிகாரி.

இந்திய ராணுவத்திற்கு அண்மையில் காஷ்மீர் மாநில எல்லை பகுதியிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக எச்சரிக்கை தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவம் மற்றும் போலீசார் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த சமயம் ஒரு வாகன சோதனையில் சந்தேகப்படும்படியான 3 நபர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மடக்கி பிடித்தனர். அதில் இரண்டு பேர் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எனவும் ஒருவர் ஸ்ரீநகர் போலீஸ் டி.எஸ்.பி தேவீந்தர் சிங் எனவும் தெரிய வந்துள்ளது. இந்த தேவீந்தர் சிங் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். துணிச்சலான சம்பவத்தில் ஈடுபட்டதற்காக ஜனாதிபதி விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விசாரிக்கையில், தீவிரவாத கும்பலுடன் அந்த போலீஸ் அதிகாரிக்கு தொடர்பு இருந்துள்ளது நிரூபணமாகியுள்ளது. தீவிரவாதிகளில் ஒருவன் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த சையத் நவீத்பாபு. இன்னொருவன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த ஆசிப் ரத்தர்  என்பது தெரியவந்துள்ளது.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், போலீஸ் டி.எஸ்.பி தேவீந்தர் சிங், 2 தீவிரவாதிகளும் காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக தப்பி செல்ல உதவிபுரிந்துள்ளார். இவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் 3 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

போலீஸ் டிஎஸ்பி தேவீந்தர் சிங் வீட்டில் சோதனை நடத்தியபோது ஏகே 47 துப்பாக்கி , 2 பிஸ்டல் துப்பாக்கி, 3 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போது அவர் அன்று பணிக்கு வரவில்லை எனவும், மேலும் நான்கு நாட்கள் விடுமுறைக்கு விண்ணப்பித்து இருந்ததாகவும் மேல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago