டெல்லியில் இன்று முதல் வாரச்சந்தைகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.
டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதை முன்னிட்டு, பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று முதல் வாரச்சந்தைகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மக்களின் வசதிக்காகவும், வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் சந்தைகளை திறக்க அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஒரு மண்டலத்திற்கு ஒரு வாரச் சந்தையில் அனுமதிக்கப்பட்ட விற்பனையாளர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அங்கு வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
சாலையோரங்களில் வாரச்சந்தை செயல்பட அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்திற்கு மேலாகவும், இறப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…