PM Modi - Amit Shah -Arvind Kejriwal [File Image]
சென்னை : பிரதமர் மோடியின் அரசியல் வாரிசு அமித்ஷா என்றும் அடுத்து யோகி ஆதித்யநாத் என்றும் கெஜ்ரிவால் பேட்டியளித்துள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இடைக்கால ஜாமீன் பெற்று தற்போது மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், இன்று உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். I.N.D.I.A கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உடன் இருந்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், அடுத்த ஆண்டு, பிரதமர் மோடிக்கு 75 வயதாகி விடும். அவர் தனது அரசியல் வாரிசாக அமித்ஷாவை தான் தேர்வு செய்துள்ளார் . இதற்காக பிரதமர் மோடி கடந்த 2,3 ஆண்டுகளாக உழைத்து வருகிறார். அமித்ஷாவுக்கு தடையாக இருந்த பாஜகவின் பெரிய தலைவர்களாக இருந்த சிவராஜ் சிங் சவுகான், மனோகர் லால் கட்டார், வசுந்தரா ராஜே, தேவேந்திர ஃபட்னாவிஸ் என அனைவரும் ஓரங்கட்டப்பட்டுவிட்டனர். அமித்ஷாவுக்கு அடுத்து ஒரு தலைவர் இருக்கிறார், அவர் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் என தெரிவித்தார்.
மேலும் பேசுகையில், நாடு முழுவதும் இருந்து வரும் தேர்தல் கணிப்புகளின்படி பாஜக 250 இடங்களுக்கும் குறைவான இடங்களையே பெறும் என்பதைக் காட்டுகிறது. அவர்கள், ஹரியானா, டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், உ.பி., பீகார், ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தானில் தங்கள் செல்வாக்கை இழந்து வருகிறார்கள். பாரதீய ஜனதா கூட்டணி மீண்டும் கண்டிப்பாக ஆட்சி அமைக்காது.
நான்கு கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு, பாஜக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. அவர்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். அவர்கள் இப்போது ஏன் 400 தொகுதிகளை வெல்வோம் என்ற கோஷத்தை எடுத்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். உண்மையில், அவர்கள் 143 இடங்களுக்கு மேல் கூட வெற்றி பெற முடியாது என்பதை அவர்களே ஒப்புக்கொண்டனர் என அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசினார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…