3 வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் – நாளை கூடுகிறது கேரள சட்டப்பேரவை

3 வேளாண் சட்டங்களுக்கு குறித்து விவாதிக்க கேரள சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வு நாளை கூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சார்பில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.இந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.இதைத்தொடர்ந்து இவைகள் சட்டமாக மாறின.ஆனால் இதற்கு எதிராக விவசாய அமைப்புகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றன.இந்த சட்டத்திற்கு எதிராக ஒரு சில மாநிலங்கள் தீர்மானமும் கொண்டு வந்துள்ளன.
இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களுக்கு குறித்து விவாதிக்க கேரள சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வு நாளை கூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025