#தங்கக்கடத்தல்-மேலும் 3 பேர் கைது- என்ஐஏ அதிரடி

Published by
kavitha

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கேரள தங்கம் கடத்தல் வழக்கில் மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள  மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திலேயே பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்   தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சரித் குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

மேலும் இவ்வழக்கின் முக்கிய  குற்றவாளியான முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை 9 நாள் காவலில் எடுத்து என்ஐஏ  அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் தீவிரவாதிகளுக்கும்  மூளையாக செயல்பட்ட ஸ்வப்னாவிற்கும் தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகி நிலையில்  என்ஐஏ  அதிகாரிகள் விசாரணையை முடிக்கிவிட்டுள்ளனர்.

இதில் தங்கம் கடத்தும் முக்கிய நபர்களின் பின்னணியில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் செயல்பட்டுள்ளதாக தெரிகிறது என்று கடந்த  சில ஆண்டுகளாகவே திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் சர்வதேச விமான நிலையங்கள்  வழியாக டன் கணக்கில் தங்கம் கடத்தப்பட்டுள்ளதாகவும்  இவற்றில் பெரும்பாலான தங்கம் தமிழ்நாட்டில்  தலைநகர்  சென்னைக்கு  கடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தான் வழக்கை  என்ஐஏ அதிகாரிகள் மிக தீவிரமாக விசாரித்து  வருவதாகவும் மேலும்  என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் இது தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் சிக்கிய வழக்கில் மேலும் 3 பேர்  அதிரடியாக கைது   செய்யப்பட்டுள்ளனர்.

எர்ணாகுளம் ஜலால், மலப்புரம் முகமது ஷபி, கொண்டோட்டி ஹம்ஜத் ஆகியோரை கொச்சியில் வைத்து கைது செய்துள்ளனர். 3 பேரும் கடத்தல் தங்கத்தை வியாபாரிகளுக்கு கொடுத்ததாக தகவல் விசாரணையில் தெரிவித்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட 3 பேரும் கேரள பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.மேலும் இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் தொடர்ந்து அதிரடியாக  கைது செய்யப்பட்டு வருவது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக கேரள வட்டங்கள் தெரிவிக்கின்றன.

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

1 hour ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

1 hour ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

2 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago