வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டம் – கேரள ஆளுநர் மறுப்பு

Published by
Venu

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்ட கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் அனுமதி மறுத்துள்ளார்.

3 வேளாண் சட்டங்களுக்கு குறித்து விவாதிக்க கேரள சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வு  இன்று  கூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால்  டிசம்பர் 23 -ஆம் தேதி சிறப்பு அமர்வு நடத்த அவசரம் இல்லை என்று கேரள அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார். சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி  வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற மாநில அரசு திட்டமிட்டிருந்தது.

இவ்வளவு குறுகிய காலத்தில் அமர்வைக் கூட்டுவதற்கான காரணங்கள் என்ன என்று அரசிடம் ஆளுநர்  கேள்வி எழுப்பினார்.இதற்கு அரசு தரப்பில் காரணங்கள் அவருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தாலும், ஆளுநர் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கேரள வேளாண் அமைச்சர் சுனில் குமார் கூறுகையில்,ஆளுநரின் நடவடிக்கை மிகவும் எதிர்பாராதது என்று  கூறியுள்ளார்.வேளாண்  சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மற்றும் டெல்லி அரசுகள் சட்டசபையின் சிறப்பு அமர்வுகளை கூட்டியுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

31 minutes ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

1 hour ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

1 hour ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

3 hours ago

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரனும்! அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

4 hours ago

“இந்தி கட்டாயம் என்ற முடிவு வாபஸ்”…,மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவிப்பு!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…

4 hours ago