நடிகை ஆயிஷாவுக்கு தேசத்துரோக வழக்கில் இருந்து கேரள ஹைகோர்ட் முன் ஜமீன் வழங்கியுள்ளது.
தயாரிப்பாளரும் நடிகையுமாகிய ஆயிஷா சுல்தான் டிவி நிகழ்ச்சியில் பேசும்போது கொரோனா பரவுவதற்கு லட்சத்தீவில் மத்திய அரசு உயிரி ஆயுதத்தை பயன்படுத்துவதாக கூறியுள்ளார். இந்த பேச்சு லட்சத்தை நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக இருந்ததாக சர்ச்சை கிளம்பியது. இதனையடுத்து பாஜக தலைவர் அமித் ஷா நடிகை ஆயிஷா மீது அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது போலீசார் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே ஆயிஷா முன் ஜாமீன் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஆயிஷாவுக்கு ஒரு வாரத்திற்கான இடைக்கால முன்ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இலட்சத் தீவில் நடைபெற்ற போலீஸ் விசாரணையில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை ஆயிஷா அளித்துள்ளார். இதனையடுத்து ஆயிஷாவின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றுள்ளது. ஆயிஷா தரப்பு வாதம் மற்றும் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள் அடுத்த போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியதுடன் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…