கேரளாவில் மதுபான கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்கு ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து டோக்கன் பெற்று கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் மதுக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் கூடாமல் தடுப்பதற்காக, ஆன்லைன் மூலமாக டோக்கன் வழங்க கூடிய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் மூலம் மது விற்பனையைத் துவங்க உள்ளது பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், மதுக் கடைகளின் முன்பாக குடிமகன்கள் மது வாங்க நின்ற நீண்ட கூட்டத்தை பார்த்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு எடுத்துள்ளது .
இந்நிலையில், இது தொடர்பாக நேற்று மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில், மாநிலத்தில் மீண்டும் மதுபானக் கடைகளை திறப்பது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த தகவலை மாநில நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக் நிருபர்களிடம் உறுதி செய்துள்ளார். மேலும், தற்போதைய சூழலில் ஏற்பட்டுள்ள செலவீனங்கள் அதிகரிப்பு காரணமாக மதுபானங்களின் விலையை உயர்த்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே அதிகபட்சமாக 35 சதவீதம் வரை மதுபானங்களின் விலை உயர்த்த இருக்கிறது. இந்த மதுபானங்களின் விலை உயர்வின் மூலம் கேரள அரசு கூடுதலாக 2,000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதன்படி மதுபானங்களின் புதிய விலை விவரம் வெளியாகியுள்ளது.
இந்த மதுபானங்கள் கேரள அரசு நடத்தக்கூடிய 301 மதுபான கடைகளை திறந்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ள போதிலும் அதற்கான உறுதியான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதேநேரம் மதுபான கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்கு ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து டோக்கன் பெற்று கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…