கேரளா விமான விபத்து… விமானியின் பிழையே காரணம்..!

Published by
murugan

விமானத்தை தரை இறக்குவதற்கான “நிலையான இயக்க நடைமுறைகளை விமானி பின்பற்றவில்லை” அதுவே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு தீவிரமாக பரவி வந்த நிலையில் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால், வெளிநாடுகளில் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வந்தனர். இதனால், மத்திய  அரசு “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 184  பணிகள் மற்றும் 2 விமானிகள் உட்பட 6 பணியாளர்கள் என மொத்தம் 191 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தனர்.

இரவு 7.40 மணிக்கு விமான நிலையத்திற்கு வந்த இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை தரை இறக்க விமானி முயற்சி செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஓடுபாதையில் விமானம் சறுக்கிக்கொண்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து  ஓடுபாதையை தாண்டி 35 அடி பள்ளத்தில் விழுந்தது.

இந்த விபத்தில், விமானம் இரண்டாக உடைந்தது. இந்த கோர விபத்தில் 2 விமானிகள்,  ஒரு குழந்தை உட்பட 21 பேர் உயிழந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து விமான விபத்து விசாரணை பணியகம் தனது விசாரணையை தொடங்கியது. இந்நிலையில், ஒரு வருடம் கழித்து விமான விபத்து விசாரணை பணியகத்தின் 257 பக்க அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது.

அதில், விமானத்தை தரை இறக்குவதற்கான “நிலையான இயக்க நடைமுறைகளை விமானி பின்பற்றவில்லை” அதுவே விமான விபத்த்திற்கு காரணமாக அமைந்து விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தரையிறங்கும் நேரத்தில் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ‘கோ அரோவுண்ட்’ என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் விமானி பின்பற்றவில்லை என தெரிவித்துள்ளது. ‘கோ அரோவுண்ட்’ என்பது விமானம் தரையிறங்கும் நேரத்தில் தரையிறங்காமல் வானில் ஒருமுறை வட்டமடித்துவிட்டு மீண்டும் தரையிறங்கும் முறையாகும்.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

18 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

23 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago