உணவகங்களில் நமக்கு தேவையான இருக்கைகளை தேர்வு செய்ய உதவியாக இருக்கும் பிரபலஅப்ளிகேஷன் Dineout, சமீபத்தில் புள்ளிவிவரப் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர், கேளிக்கை விடுதியில் இரவு உணவிற்கான இருக்கையை புக் செய்ய ரூ.2 லட்சத்து 76,988 பணத்தை செலுத்தியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், Dineout வெளியிட்டுள்ள இந்த தகவல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு உணவுக்காக அவ்வளவு பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக குடும்பத்தினருடன் இன்ப சுற்றுலா சென்றிருக்கலாம் என்றும், தனது வாகன ஓட்டுநருக்கு நான்கு சக்கர வாகனம் ஒன்றை பரிசளித்திருக்கலாம் என்றும், பலரும் சமூக வலைதளங்களில் அவர்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
உணவு பொருட்களுக்கு அதிகமாக செலவழிப்பதை நாம் கேள்விப்பட்டிருந்தாலும், இரவு உணவிற்கு லட்சக்கணக்கான பணம் செலவழித்திருப்பது சற்று வினோதமாகவே மக்களிடையே பார்க்கப்படுகிறது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…