Categories: இந்தியா

கொல்கத்தா: மாலில் தீ விபத்து! மக்களை மீட்கும் பணிகள் தீவிரம்!

Published by
அகில் R

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஒரு மாலில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அக்ரோபோலிஸ் மாலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இது வரை வெளியாகவில்லை என்றாலும் உள்ளே இருக்கும் மக்களை காக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொல்கத்தாவின் ராஜ்தங்கா மெயின் ரோட்டில் அமைந்துள்ள அக்ரோபோலிஸ் வணிக வளாகத்தின் 5-வது மாடியில் அமைந்துள்ள ஃபுட் கோர்ட்டில் இருந்து இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும்  தீயணைக்கும் வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் பரவி வரும் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.

பொதுமக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு,  அந்த வணிக வளாகத்தின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து பொது மக்களை வெளியேற்றும் பணிகளை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.  அடர்த்தியான புகை சூழ்ந்துள்ளதால் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் சில சிக்கல்களை சந்தித்து வருகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.

இதனால், பரவி வரும் தீயை அணைக்கும் பாதை முழுக்க குப்பைகளால் அடைக்கப்பட்டதாலும் கட்டிடத்திற்குள் செல்வதில் சில சிரமம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போதைக்கு, யார் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் தெரியவில்லை. மேலும், அந்த பகுதி முழுவதும் புகை மூட்டத்தால் சூழப்பட்டுள்ளது. கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

Published by
அகில் R

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

1 hour ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

1 hour ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

3 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

3 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

4 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

4 hours ago