எய்ம்ஸ் டெல்லி மருத்துவமனையில் 5 தன்னார்வலர்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி

Published by
Rebekal

கொரோனா தடுப்பு ஊசியாகிய கோவாக்சின்  5 தன்னார்வலர்கள் மீது எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று போடப்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த பல மாதங்களாக உலகையே உலுக்கி வரும் நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  1 கோடியை தாண்டியுள்ளது , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது . இந்நிலையில் இதற்கான மருந்துகளையும் தடுப்பூசிகளையும் பல்வேறு நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் விரைந்து கண்டுபிடித்து வருகின்றனர். தற்பொழுது பல இடங்களில் இதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும், முறையாக அதிகாரபூர்வமான மருந்து என ஒன்றும் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இதுவரை பல ஆய்வுகளில் வெற்றிகண்டு கொரோனாவுக்கு எதிரான நல்ல செய்தியை கொடுத்துள்ளனர். தற்பொழுது அங்கு 5 தன்னார்வலர்கள் மீது எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி நேற்று  போடப்பட்டுள்ளது. இந்த சோதனைக்காக 3,500 பேர் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் 100 ஆரோக்கியமான நபர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆரம்கட்டத்தில்  இந்த மருந்தானது  10 நோயாளிகள் மீது செலுத்தப்படும் .பின்பு அதன் செயல்பாடுகள் குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் .அதில் வரும் முடிவுகளை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எய்ம்ஸில் இந்த சோதனைகளுக்கு தலைமை தாங்கும் டாக்டர் ராய் கூறினார்.

Published by
Rebekal

Recent Posts

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

8 minutes ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

49 minutes ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

1 hour ago

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…

1 hour ago

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

11 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

12 hours ago