ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவுக்கு 4-வது வழக்கிலும் ஜாமீன்..!

Published by
murugan

தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடி ஊழல் செய்தது தொடர்பான 4-வது வழக்கில் லாலு பிரசாத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் 1996-ஆம் ஆண்டு முதல்வராக இருந்தபோது கால்நடைத் தீவன ஊழல் செய்தது தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடி ஊழல் செய்தது தொடர்பான 4-வது வழக்கில் ஜாமீன் கோரி கடந்த பிப்ரவரி மாதத்தில் லாலு பிரசாத் மனு தாக்கல் செய்தார்.

ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி தண்டனையில் பாதி காலம் முடியாததால்  மனுவை தள்ளுபடி செய்தனர். பாதி தண்டனை காலத்தை நிறைவு செய்ய 2 மாதங்கள் உள்ளதால் 2 மாதங்கள் கழித்து ஜாமீன் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தினர். அதன்படி சமீபத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

இந்த ஜாமீன் மனு இன்று  ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அபரேஷ் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளார். லாலு பிரசாத் தனது பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும். நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவர்கள் வெளிநாடு செல்ல முடியாது. அவரது மொபைல் எண் மற்றும் முகவரியை மாற்ற வேண்டாம் என்று நீதிமன்றத்தால் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லாலு பிரசாத் மீது ஐந்து வழக்குகள் இருந்தன. இதுவரை, அவர் மூன்று வழக்குகளில் ஜாமீன் பெற்ற நிலையில் இன்று அவருக்கு நான்காவது வழக்கிலும்  ஜாமீன் கிடைத்துள்ளது. இப்போது லாலு யாதவுக்கு மொத்தம் நான்கு வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஐந்தாவது வழக்கு டோராண்டா கருவூலம் தொடர்பான வழக்கு உள்ளது. இது குறித்து சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

சாய்பசா கருவூலத்தில் இருந்து ரூ.37.7 கோடி ரூபாய் ஊழல் செய்தது, தியோகர் கருவூலத்தில் இருந்து ரூ.79 லட்சம் ஊழல் செய்தது, மேலும் ஒரு ஊழல் வழக்குகளில் ஏற்கனவே லாலு பிரசாத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அவரது மகனும், எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஷ்வி யாதவ் ஜாமீன் நிலைமை குறித்து கூறினார். நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

தற்போது அவர் எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை நடந்து வருகிறது. அவரது உடல்நிலை குறித்தும் நாங்கள் கவலை கொண்டுள்ளோம். அவரது சிறுநீரக தொற்று மிக அதிகமாக உள்ளது மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளது. அவர் எய்ம்ஸில் மட்டுமே சிகிச்சை பெறுவார் என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

9 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

10 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

10 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

11 hours ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

11 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

12 hours ago