முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வீட்டு குடும்ப விவகாராம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது!

Published by
மணிகண்டன்

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் தற்போது குடும்ப பிரச்சனை பெரியதாகி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடும் அளவிற்கு வளர்ந்துவிட்டது.

பீகார் மாநில முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி, லாலு பிரசாத் யாதவின் மகன்களில் ஒருவரான தேஜ் பிரதாப் யாதவுக்கு ஆறு மாதத்திற்கு முன்னர் பீகார் எம்எல்ஏ சந்திரிகாவின் மகன் ஐஸ்வர்யா ராயுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது தேஜ் பிரதாப் யாதவ் மனைவிக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறி, நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதற்கு தேஜ் பிரதாப் யாதவின் மனைவி ஐஸ்வர்யா ராய் மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், தனக்கும் தன் கணவருக்கும் இடையில் சண்டை வருவதற்கு முக்கிய காரணம் தன் கணவரின் சகோதரியான மிசா பாரதிதாசன்தான். அவர்களால் தான் எங்களுக்குள் சண்டை வருகிறது எனவும் குறிப்பிட்டார். மேலும், இந்த வீட்டில் (லாலு பிரசாத் யாதவ் வீட்டில் ) எனக்கு சாப்பாடு யாரும் தருவதில்லை. எங்கள் வீட்டில் இருந்தே எனக்கு சாப்பாடு வருகிறது. இந்த வீட்டு சமையலறையில் என்னை நுழைய விடுவதில்லை. இந்த வீட்டில் உள்ள சமையல்காரன் கூட சமையலறையை பூட்டி போட்டு விட்டு என்னை வெளியே தள்ளுகிறார் எனக் கூறினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த மிசா பாரதிதாசன், கணவன் மனைவிக்குள் எந்த பிரச்சனை என்றாலும் உடனே கணவரின் சகோதரி மீது பழிபோடுவது வழக்கமான ஒன்றுதான். கணவன் மனைவி பிரச்சனையில் நான் தலையிடவில்லை என மறுப்பு தெரிவித்தார்,

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

1 hour ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

2 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

2 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

4 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

7 hours ago