மம்தா பானர்ஜி அவர்கள் பாஜக அல்லாத முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து மூன்றாம் முறையாக ஆட்சியை பிடித்துள்ளார். இந்தநிலையில் மம்தா பானர்ஜி அவர்கள் பாஜக அல்லாத முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் நமது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீது பாஜக பலமுனை தாக்குதல் நடத்தி வருகிறது. பாஜக அரசு தனது அரசியல் எதிரிகளை குறிவைத்து அமலாக்க இயக்குனரகம், சிபிஐ, மத்திய விஜிலென்ஸ் கமிஷன் உள்ளிட்ட மத்திய அமைப்புகளை தவறான முறையில் பயன்படுத்தி வருகிறது. இந்த அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரம் இது.
நாம் அனைவரும் முன்னோக்கி செல்லும் வழியை பற்றி விவாதிக்க ஒரு கூட்டம் நடத்த வேண்டும். ஒவ்வொருவரும் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப ஓரிடத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டம் நடத்த வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்கும் ஒரே நோக்கத்துடன் மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் பாஜகவின் நோக்கத்தை நாம் எதிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…