மின்னல் மனிதன் உசைன் போல்டின் வேகத்தை மிஞ்சும் கர்நாடகா இளைஞர்.? 142.5 மீட்டரை 13.62 நொடிகளில் ஓடி சாதனை.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • கர்நாடகாவில் நடைபெற்ற எருது விடும் விழாவில் கலந்துகொண்ட வீரரான ஸ்ரீநிவாசகவுடா, 142.5 மீட்டரை வெறும் 13.62 நொடிகளில் ஓடி வெற்றி பெற்று, உசைன் போல்டின் சாதனையை முறியடித்துவிட்டார் என இணையதளத்தில் பரவி வருகிறது.

ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் மின்னல் வேகத்தில் ஓடக்கூடிய நட்சித்திர வீரர். இவர் ஓட்டபந்தியத்தில் உலக சாதனையை படைத்தது, அதனை மீண்டும் அவரே முறியடித்து சாதனை படைத்தார். பின்னர் தான் பங்கேற்கும் போட்டிகளில் வெற்றிகளை குவிக்கும் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட்டுக்கு உலக முழுவதும் ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள். இவர் 100 மீட்டர் ஓட்டபந்தியத்தில் 9.58 நொடிகளில் ஓடி உலக சாதனை படைத்திருக்கிறார். ஓட்டபந்திய போட்டியில் இவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கர்நாடகாவில் நடந்த விழா ஒன்றில் ஒரு உள்ளூர் வீரர் இவரது சாதனையை முறியடித்து விட்டதாக இணையதளத்தில் கருத்து கூறி வருகின்றனர்.

Srinivasa Gowda

இந்நிலையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுபோல கர்நாடகாவில் நடைபெற்ற எருது விடும் விழாவில் கம்பாளா என்ற ஓட்டபந்தியத்தில் சுமார் 143 தூரத்தை தனது எருதுகளுடன் ஓட வேண்டும். அந்த ஓடக்கூடிய தளத்தில் தண்ணீர் ஊற்றப்பட்டு சேறும், சகதியுமாக இருக்கும். தங்கள் எருதுகளை முன்னே ஓடவிட்டவாறு கயிற்றை பிடித்துக் கொண்டு வீரரும் பின்னே ஓடவேண்டும். இந்த போட்டியில் கலந்துகொண்ட வீரரான ஸ்ரீநிவாசகவுடா, 142.5 மீட்டரை வெறும் 13.62 நொடிகளில் ஓடி வெற்றிபெற்றுள்ளார். இந்த விழாவில் சாதனை படைத்த இவரின் வேகத்தை சிலர் உசைன் போல்டின் சாதனையுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அதாவது, ஸ்ரீனிவாச கவுடா 100 மீட்டரை 9.55 நொடிகளில் ஓடியிருக்கிறார் என கணக்கிட்டு அவர்கள், இது உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த கணக்குதான் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் இதுபோன்ற வீரர்களை அரசு கவனத்தில் எடுத்து சரியான பயிற்சி வழங்கினால் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் இந்தியா பதக்கங்களை குவிக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது ஒருபக்கம் இருக்க, மாடுகளின் வேகத்தால் பின்னே ஓடுபவரின் வேகம் அதிகமாகிறது என்றும், மாடுகளோடு ஓடுவதும், களத்தில் தனியாக ஓடுவதும் ஒன்றல்ல என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருவேறுபட்ட சூழல் என்பதால் இரண்டையும் இணைத்து பார்க்கக்கூடாது என்று பதிவிட்டு வருகிறார்கள். பின்னர் எதுவாக இருந்தாலும் ஸ்ரீனிவாச கவுடா தன் ஓட்டத்தில் ஒரு சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இரட்டை சதம் விளாசி கிங் கோலி சாதனையை முறியடித்த கில்! புகழ்ந்து தள்ளிய கங்குலி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…

12 minutes ago

முதல் படத்திலே இப்படியா? சூப்பர் நண்பா! ‘ஃபீனிக்ஸ்’ படத்தை பாராட்டிய விஜய்!

சென்னை :  நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…

36 minutes ago

இந்தியாவுக்கு 500% வரி..அமெரிக்காவில் புதிய மசோதா தாக்கல்!

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…

1 hour ago

சுற்றுப்பயணம் குறித்து முடிவு? விஜய் தலைமையில் இன்று தவெக செயற்குழுக் கூட்டம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

2 hours ago

உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய உலகச் சாம்பியன் குகேஷ்!

ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…

2 hours ago

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

3 hours ago