[Image source : Twitter @ikamalhaasan]
மநீம தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகா தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் முன்னிலையில் உள்ள 136 தொகுதிகளில் 114 இடங்களில் வெற்றி பெற்று 22 இடங்களில் முன்னிலையில் இருந்து வரும் நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகம் மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதிலும் காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்க தேவையான அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர், ராகுல் காந்தியின் இந்த வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், காந்தியைப் போலவே, நீங்கள் மக்களின் இதயங்களுக்குள் நுழைந்தீர்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், அவரைப் போலவே உங்கள் மென்மையான வழியில் அன்புடனும் பணிவுடனும் உலகின் சக்திகளை அசைக்க முடியும் என்பதை நிரூபித்தீர்கள், பிரிவினையை நிராகரிக்க கர்நாடக மக்களை நீங்கள் நம்பினீர்கள், அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒற்றுமையாக பதிலடி கொடுத்தனர். வெற்றிக்கு மட்டுமல்ல வெற்றியின் விதத்திற்கும் பாராட்டுக்கள் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…