ஹைதராபாத் விலங்கியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கம் கொரோனவால் பாதிப்பு..!

Published by
Hema

ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி.

இந்தியாவில் உள்ள ஹைதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் இந்தியாவில் நடப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் சிங்கங்களுக்கு ஊசி மூலம் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மூக்கு, தொண்டை மற்றும் சுவாசக் குழாயிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மூலம் சோதனை செய்ததில் தொற்றானது வெளியிலிருந்து பரவியிருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

விலங்குகள் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு உலகின் பிற இடங்களில் உள்ள மிருகக்காட்சிசாலையின் விலங்குகளின் சார்ஸ்-கோவ் 2 (கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸ்) இருப்பது கண்டறியப்பட்டது. விலங்குகள் இந்த நோயை மனிதர்களுக்கு மேலும் பரப்ப முடியும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை.

இந்த மாதிரியான தொற்றானது இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதம் பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் புலிகள் மற்றும் சிங்கங்களுக்கும், டிசம்பர் மாதம் லூயிஸ்வில் மிருகக்காட்சிசாலையில் பனிச்சிறுத்தைக்கும் இருந்தது.

இந்த தொற்று இந்தியாவில் ஏற்பட்டுள்ள தொற்று வகையைச் சேந்தது இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் வீட்டு பூனைகள், நாய்கள்போன்ற விலங்குகளுக்கு கூட கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) சார்ஸ்-கோவ் -2 குறித்த முழுமையான ஆவணத்தைக் கொடுத்துள்ளது.

அதில் செல்லப்பிராணிகளிடையே செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

  • பூனைகளை முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே வைத்திருங்கள், நாய்களை மற்றவர்களிடமிருந்து குறைந்தது 6 அடி தூரத்தில் வைத்திருங்கள்
  • அதிக மக்கள் கூடும் பொது இடங்களைத் தவிர்க்கவும்.
  • செல்லப்பிராணிகளுக்கு மாஸ்க் அணிவிக்க வேண்டாம். மாஸ்க் உங்கள் செல்லப்பிராணிக்கு தீங்கு விளைவிக்கும்.
  • உங்கள் செல்லப்பிராணியை ரசாயன கிருமிநாசினிகள் அல்லது ஆல்கஹால் போன்றவற்றால் துடைக்கவோ அல்லது குளிக்கவோ வைக்க வேண்டாம்.
  • நீங்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் இருந்தால்  உங்கள் செல்லப்பிராணிகளுடனும் பிற விலங்குகளுடனும் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும். முடிந்தால், நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது உங்கள் செல்லப்பிராணிகளை உங்கள் வீட்டு பராமரிப்பில் இருப்பதை தவிர்க்கவும்.
  • செல்லப்பிராணியுடன் தொடர்புகொள்வது முத்தமிடுவது மற்றும் உணவு அல்லது படுக்கைகளைப் பகிர்வது உள்ளிட்டவற்றை முடிந்தவரை தவிர்க்கவும்.
  • கையில் க்ளவுஸ் அணிந்து செல்லபிராணிகளை குளிப்பாட்டுங்கள், பின் உங்கள் கையை உடனடியாக சோப்பு போட்டு சுத்தம் செய்துவிடுங்கள்.
Published by
Hema

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

3 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

3 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

4 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

4 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

6 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

7 hours ago