Categories: இந்தியா

மதுபான கொள்கை வழக்கு ..! EDயின் குற்றப்பத்திரிகையை ஏற்றது டெல்லி உயர்நீதிமன்றம் ..!

Published by
அகில் R

அரவிந்த் கெஜ்ரிவால் : மதுமான கொள்கை வழக்கு தொடர்பாக, சிபிஐயால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை இன்று நீதிமன்றம் விசாரணையை எடுத்துக்கொண்டது.

கடந்த ஜூன் 26 ஆம் தேதி அன்று, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகு டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ இந்த வழக்கில் அவரை முறைப்படி கைது செய்தது. இது தொடர்பான வழக்கில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மீ கட்சிக்கு எதிராக அமலாக்க துறையினார் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

மேலும், பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 7-துணை வழக்குப் புகாரை ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியான காவேரி பவேஜா விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட வினோத் சவுகான் மற்றும் ஆஷிஷ் மாத்தூர் ஆகியோருக்கு எதிராக அமலாக்க துறையினர் 8 துணை குற்றப்பத்திரிகைகளையும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் ஜூலை 12-ம் தேதி புரொடக்ஷன் வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ கைது செய்து 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்திருப்பதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தற்போது மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், மதுமான ஊழல் வழக்கில் ஜாமீன் கோரியும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த இரண்டு வழக்குகளையும் டெல்லி உயர்நீதிமன்றம் வருகிற ஜூலை 17ஆம் தேதி அன்று விசாரணைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Published by
அகில் R

Recent Posts

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…

8 minutes ago

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!

விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…

51 minutes ago

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…

1 hour ago

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

2 hours ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

3 hours ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

5 hours ago