Arvind Kejriwal [file image]
அரவிந்த் கெஜ்ரிவால் : மதுமான கொள்கை வழக்கு தொடர்பாக, சிபிஐயால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை இன்று நீதிமன்றம் விசாரணையை எடுத்துக்கொண்டது.
கடந்த ஜூன் 26 ஆம் தேதி அன்று, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகு டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ இந்த வழக்கில் அவரை முறைப்படி கைது செய்தது. இது தொடர்பான வழக்கில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மீ கட்சிக்கு எதிராக அமலாக்க துறையினார் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
மேலும், பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 7-துணை வழக்குப் புகாரை ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியான காவேரி பவேஜா விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட வினோத் சவுகான் மற்றும் ஆஷிஷ் மாத்தூர் ஆகியோருக்கு எதிராக அமலாக்க துறையினர் 8 துணை குற்றப்பத்திரிகைகளையும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் ஜூலை 12-ம் தேதி புரொடக்ஷன் வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ கைது செய்து 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்திருப்பதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தற்போது மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், மதுமான ஊழல் வழக்கில் ஜாமீன் கோரியும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த இரண்டு வழக்குகளையும் டெல்லி உயர்நீதிமன்றம் வருகிற ஜூலை 17ஆம் தேதி அன்று விசாரணைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ' ஜனநாயகன்' பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100…
டெல்லி : அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக,…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ' ரெட்ரோ ' படம்…
திருச்சி : தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் 25 முதல் (ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு தினம்) பொதுவாக கோடை…