டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான 43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர்.
பிரதமர் மோடி தலைமையில் பாஜக 2வது முறையாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது. பிரதமர் மோடி அமைச்சரவை முதல் முறையாக இன்று விவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் 43 பேர் இடம்பெற்றுள்ளனர். புதிய மத்திய அமைச்சரவையில் 11 பெண்கள், 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 14 பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள் ஆவார்.
மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், 12 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான 43 புதிய மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவராக பதவியேற்று வருகின்றனர். இவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த பதவி பிரமாணம் செய்து வருகிறார்.
அதன்படி,
ராஜஸ்தானை சேர்ந்த மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரி அஸ்வினி வைஷ்ணவ் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ராம்சந்திர பிரசாந்த் சிங் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
மத்திய அமைச்சராக அஜய்குமார் பதவியேற்றார்.
மத்திய அமைச்சராக தேவுசிங் செளகான் பதவியேற்றார்.
திரிபுரா பெண் எம்.பி. பிரதிமா பொய்மிக் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.
டாக்டர் சுபாஷ் சர்கார் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.
பிஸ்வேஸ்வர் டுடு மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
ஜான் பார்லா மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…