இந்தியாவில் 100 நகரங்களில் உள்ளூர் விற்பனை – அமேசான்நிறுவனம்

Published by
லீனா

இந்தியாவில் 100 நகரங்களில் உள்ளூர் விற்பனை கடைகள் திறக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் ஆன்லைன் விரவணையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்தியாவில் கடுமையான வர்த்தக போட்டி அமேசான் நிறுவனம் மற்றும் ப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு இடையே நிலவி வருகிறது

இந்நிலையில், இரண்டிற்கும் சவாலாக ரிலையன்ஸ் நிறுவனம்  ஜியோ மார்ட்டை, பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து மேம்படுத்துகிறது. இதனையடுத்து அமேசான் நிறுவனம், வர்த்தக போட்டியில் ஜியோ மார்டை சமாளிக்க முடிவு செய்துள்ளது.

இதனால் அமேசான் நிறுவனம், இந்தியாவில் 100 உள்ளூர் கடைகளை திறக்க முடிவெடுத்துள்ளது. இதற்காக இந்தியாவில் 5,000 சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் இந்நிறுவனம் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக அமேசான் நிறுவனம் 10 கோடியை முதலீடு செய்துள்ளது.

இதன் முதற்கட்டமாக அகமதாபாத், கோவை, டெல்லி, ஃபரிதாபாத், ஹைதராபாத், இந்தூர், ஜெய்பூர், லக்னோ, மும்பை, பூனே, சஹாரான்பூர் மறறும் சில நகரங்களில் இந்த கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

இந்த கடைகளில், வாகன உதிரிபாகங்கள், புத்தகங்கள், ஃபர்னிச்சர்ஸ், வீட்டு அலங்கார பொருட்கள், நகைகள், சமையலறை சாதனங்கள் மற்றும் பொம்மை பொருட்கள் போன்றவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்தம் செய்யப்பட்ட கடைகளில் வாடிக்கையாளர்கள் பொருட்களை பதிவு செய்த அதே தினத்திலோ அல்லது அதற்கடுத்த நாளோ பொருட்களை டெலிவரி செய்திட வேண்டும் என அமேசான் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

9 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

9 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

10 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

10 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

11 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

13 hours ago