பீகாரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அம்மாநிலத்தில் செப். 6-ம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் கொரோனா பரவலுக்கு ஏற்ப, சில மாநிலங்களில் ஊரடங்கை நீடித்தும் வருகின்றனர்.
அந்தவகையில், பீகார் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், நேற்று ஊரடங்கை நீடிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
அந்த கூட்டத்தின்போது, பீகார் மாநிலத்தில் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் செப். 6-ம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதாக அம்மாநில அரசு தெரிவித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என தெரிவித்தது.
மேலும், அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து அலுவலகங்களும் 50 சதவீத தொழிலாளர்களுடன் செயல்பட அனுமதி விதித்துள்ளது. அதுமட்டுமின்றி, ரயில் மற்றும் விமான சேவைகள் தொடரும் எனவும், இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அரசாணையில் பீகார் மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…