வெளிநாடுகளுக்கு செல்ல மற்றும் அடையாள ஆவணமாக இருக்கும் பாஸ்போர்ட் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பாஸ்போர்ட் துறையினால் வழங்கப்படுகிறது. சமீபத்தில் கேரளாவின் கோழிக்கோடு பகுதிகளில் விண்ணப்பித்தவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம் அச்சியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஸ்போர்ட்டின் இரண்டாவது பக்கத்தின் கீழே மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கையெழுத்து இடம் பெற்றிருக்கும். புதிய பாஸ்போர்ட்டுகளில் அதிகாரியின் கையெழுத்து இருக்கும் இடத்தில் ஒரு செவ்வக கட்டத்தின் உள்ளே தாமரை சின்னம் இருக்கிறது. இதை பற்றி நேற்று மக்களவையில் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி ராகவன் கேள்வி எழுப்பியிருந்தார். மத்தியில் ஆளும் பாஜகவின் சின்னம் தாமரை என்பதாலும், இது காவிமயமாக்குதலின் மற்றொரு திட்டமா? என, செய்திதாள் ஒன்றில் வெளியான செய்தி ஒன்றை சுட்டிகாட்டினார்.
இது பற்றி விளக்கம் அளித்த தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, பாதுகாப்பு காரணமாகவும், போலி பாஸ்போர்ட்டுக்களை கண்டறியவும் தற்போது பாஸ்போர்ட்டில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இது மட்டுமின்றி இன்னும் 10 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அவை குறித்து வெளிப்படையாக கூறக் கூடாது. இந்த பாதுகாப்பு அம்சங்கள் மூலம் போலி பாஸ்போர்ட்டுகள் கண்டறியப்படும். இந்தியாவின் தேசிய மலர் தாமரை ஆகும். எனவே இந்தியா என்னும் வார்த்தையுடன் தாமரை இடம் பெற்றுள்ளது. இதைச் சர்ச்சைக்கு உள்ளாக்கத் தேவை இல்லை என கூறினார் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…