மக்களே.! நாளை புறநிழல் சந்திர கிரகணம்.! வெறும் கண்களால் பார்க்கலாம்…எப்போது தெரியுமா?

Published by
கெளதம்

ஏப்ரல் 20 ஆம் தேதி கலப்பின சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து, சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்கோட்டில் சந்திக்கவுள்ளதால் வானத்தில் அடுத்த வானியல் நிகழ்வு (சந்திர கிரகணம்) நாளை தெரிகிறது.

மே 5-ம் தேதி நாளை புறநிழல் சந்திர கிரகணம் நிகழவுள்ளதாகவும், இந்த கிரகணத்தின் போது, வழக்கத்தைவிட நிலவு கருமையாக காணப்படும் என நாசா தகவல் தெரிவித்துள்ளது. இதனை வெறும் கண்களால் காண முடியும் எனவும், இந்திய நேரப்படி இரவு 8.44 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 1.01 மணி வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

lunar eclipse on may [Image source : Photo: AFP]

புறநிழல் சந்திர கிரகணம்:

முழு நிலவின் போது மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும். பூமியானது சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் துல்லியமாக அமைந்திருக்கும் போது. பூமியின் நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழுகிறது. இது சந்திரனால் பிரதிபலிக்கும் சூரிய ஒளியை மறைக்கிறது. பூமியின் நிழலின் இருண்ட பகுதியான பூமியின் குடை வழியாக சந்திரன் செல்லும் பாரம்பரிய கிரகணத்திலிருந்து இது வேறுபடும் என கூறப்படுகிறது.

lunar eclipse on may 5 2023 [Image source : space.com]

இந்தியாவில் எப்போது தெரியும்:

இந்தியாவில் இந்த சந்திர கிரகணம் நாளை இரவு 08:44 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் இரவு 01:01 மணிக்கு முடிவடையும். ஆனால், சந்திரன் பூமியின் பெனும்பிராவில் நுழைந்து வெளியேறுவதால் இந்த கிரகணத்தின் ஆரம்பம் மற்றும் முடிவை நாம் காண முடியாது என்று வானியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

lunar eclipse 2023 [Image source : space.com]

எந்தெந்த நாடுகளில் தெரியும்:

தெளிவான வானத்துடன் கூடிய சூழ்நிலையில் இருக்கும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கிரகணம் தெரியும். அதன்படி, இந்த சந்திர கிரகணம் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடன் ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் காணப்படும்.

Published by
கெளதம்

Recent Posts

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

9 minutes ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

46 minutes ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

58 minutes ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

2 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

3 hours ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

3 hours ago