கலைக்கப்பட்டது கமல்நாத் அமைச்சரவை…ம.பி..அரசியலில் பரபரப்பு..கொத்தாக எம்எல்ஏக்கள் பதவி விலகல்..!

Published by
kavitha

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அமைச்சரவை கலைக்கப்பட்டது.பு 16 எம்எல்ஏக்கள் பெங்களூரில் ரிசார்ட்டில் தங்கிய நிலையில்  முதல்வர் கமல்நாத் இரவோடு இரவாக அமைச்சரவை கலைத்துவிட்டார். 22 அமைச்சர்களும் இரவோடு இரவாக பதவி விலகிய சம்பவம் மத்தியபிரதேச அரசியலில் அதிரடி திருப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துள்ளது.

Image result for madhya pradesh POLTICS

மத்திய பிரதேசத்தில் தன் ஆட்சி கவிழ்வதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கியதை அடுத்து இந்த அதிரடி கலைப்பு  நிகழ்ந்துள்ளது.மத்திய பிரதேச அரசியலில் கடந்த வாரம் முதலே அங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்களை பாஜகவினர் கடத்தி வைத்து அடுக்கடுக்காக  புகார் வைத்தது காங்கிரஸ்.இவர்களை வைத்து எங்கள் ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் திட்டமிடுகிறார்கள் என்று பகீரங்கமாக காங்கிரஸ்  கூறி வந்த நிலையில் தற்போது அங்கு அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

மத்திய பிரதேசத்திலும்  ரிசார்ட் அரசியல் மீண்டும் சூடுபிடித்தது. டெல்லி அருகே குர்கானில் உள்ள ஐடிசி ஹோட்டலில் இவர்கள் அனைவரும்  அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் ஆனால் அதில் 8 எம்எல்ஏக்கள் திரும்பி வந்து விட்டதாகவும்  இன்னும்2 காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் டெல்லியில் தான் உள்ளதாகவும். இவர்களை காங்கிரஸ் தலைவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லையாம் இந்த 2பேரும்ள் பாஜக உடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் 6 எம்எல்ஏக்கள் அதிரடியாக பெங்களூரில் ரிசார்ட் ஒன்றில் தங்கிய நிலையில் கடும் நெடுக்கடி கமல்நாத்திற்கு ஏற்படவே அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. இந்த கலைப்பு முன் முதல்வர் கமல்நாத் இரவோடு இரவாக ஒரு  மீட்டிங் ஏற்பாடு செய்தார் அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அமைச்சரவை கலைப்பு குறித்த  அதிரடி முடிவு எடுத்துள்ளார். மேலும் அம்மாநிலத்தில் 22 அமைச்சர்களும் இரவோடு இரவாக  பதவி விலகி உள்ளனர். மாயமான அல்லது மாயமாக்கப்பட்ட 16 எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவை பதவி வழங்கி அவர்களை  சமாதானம் செய்கின்ற வகையில் கமல்நாத் இறங்கி உள்ளதாகவும் இது குறித்து அவர் நேற்று மாலை  காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேசத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.அங்கு தற்போது வரை ஆட்சி செய்த காங்கிரஸ் கூட்டணிக்கு 120 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 113 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு ஆதரவு தரும் பகுஜன் சமாஜ் கட்சியில் 2 எம்எல்ஏக்களும், சமாஜ்வாதி கட்சியில் ஒரு எம்எல்ஏவும், 4 சுயேட்சைகளும் உள்ளனர்,ம.பி ஆட்சி அமைக்க 116 எம்எல்ஏக்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.பாஜகவிற்கு 107 எம்எல்ஏக்கள் பலம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.அங்கு அடுத்தடுத்து நிலவும் அரசியல் குழப்பங்கள் அம்மாநில மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Published by
kavitha

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

10 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

13 hours ago