இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் பாதிப்பும், பலியும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்களை சமூக விலகலை கடைபிடிக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 3374 ஆகவும், பலி எண்ணிக்கை 77 ஆகவும் உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 267 பேர் குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலம், மகாராஷ்டிரா தான் முதலிடத்தில் உள்ளது. இங்கு பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் அம்மாநிலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே மகாராஷ்டிராவில் பாதிப்பு 537 ஆக இருந்த நிலையில், தற்போது 635 ஆக அதிகரித்துள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனாவால் பாதித்த 635 பேரில் 377 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுவரை 52 பேர் வைரஸில் இருந்து குணமடைந்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…