மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து ஒருமாதம் ஆகியும் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாததால் தற்போது குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.
பதவி பகிர்வில் ஏற்பட்ட சிக்கலால் பாஜகவுடனான கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டு தேசியவாத காங்கிரஸ் , காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி வருகிறது. இந்நிலையில் நேற்று பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்களுடன், காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதை தொடர்ந்து சிவசேனாவுடன், காங்கிரஸ் கூட்டணி அமைக்க சோனியா காந்தி ஒப்புக்கொண்டதாக என தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் சரத் பவாரை காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர். சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரிதிவிராஜ் சவான் “காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையே நீண்ட நேரம் விவாதங்கள் நடந்தன. ஆலோசனை தொடர்ந்து நடைபெறும். மஹாராஷ்டிராவில் நிலையான ஆட்சியை விரைவில் எங்களால் கொடுக்க முடியும் என நான் நம்புகிறேன்”என கூறினார்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…