மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் மம்தா பானர்ஜி.!

ருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
கடந்த வாரம் ஜல்பைகுரி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு திரும்பும் போது விமானம் அவசரமாக தரையிறங்கியதையடுத்து, அதில் இருந்து இறங்கும் போது காயம் அடைந்த மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், காயமடைந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். உடல்நிலை சரியானதால் மருத்துவர்கள் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் மம்தாவுக்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மருத்துவமனையில் இருந்து வெளியேறும்போது, மேற்கு வங்க முதல்வர் டிஎம்சி தலைவரும், அவரது மருமகனுமான அபிஷேக் பானர்ஜியும் உடன் வந்தார்.