பாஜக எனும் பூனைக்கு மணி கட்டுவது தான் எனக்கு முக்கியம் – மம்தா பானர்ஜி!

Published by
Rebekal

எதிர்க்கட்சிகள் இணையும் ஓரணியில் தலைவர் யாராக இருந்தாலும் எனக்கு சம்மதம் தான், ஆனால் பாஜக எனும் பூனைக்கு மணி கட்டுவது தான் எனக்கு முக்கியம் என கூறியுள்ளார். 

டெல்லியில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகிய மம்தா பானர்ஜி டெல்லி பயணத்தின் முதல் நாள் செவ்வாய் கிழமை சில காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்தார். அதன் பின்பதாக மாலை 4 மணியளவில் மரியாதையின் நிமித்தமாக பிரதமர் மோடி அவர்களையும் சந்தித்தார்.

பின் நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் சந்தித்திருந்தார். அதன் பின்பதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மம்தா பானர்ஜியிடம், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணையும் ஓரணியில் யார் தலைவர் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த மம்தா பானர்ஜி, சூழலை பொறுத்து தலைவர் நியமிக்க படுவார்கள் எனவும், யார் தலைவராக வந்தாலும் தனக்கு சம்மதம் தான், பாரதிய ஜனதா எனும் பூனைக்கு மணி கட்டுவது தான் தனக்கு முக்கியம் என கூறியுள்ளார். மேலும், பாஜக எண்ணிக்கை ரீதியாக பெரிதாக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாக பலமானதாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

மேலும், 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் மோடிக்கும் நாட்டிற்கும் இடையில் நடைபெறும் தேர்தலாக இருக்கும் எனவும், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்தால் வரலாறு உருவாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

8 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

9 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

9 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

10 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago