கடந்த 20 வருடத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை விஷம் வைத்து கொன்ற நபர் கைது…!

Published by
Rebekal

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 20 வருடத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை விஷம் வைத்து கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மகனை கடந்த ஒரு வாரமாக காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சொத்து தகராறு காரணமாக தனக்கு நெருக்கமாக உள்ள சில உறவினர்கள் அவனை கடத்தி உள்ளதாகவும், சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை குறிப்பிட்டு புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஹபூர் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளியாகிய புகார் அளித்தவரின் சகோதரர் லீலுவிடம் போலீசார் நடத்தியுள்ளனர். அப்பொழுது தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சிறுவனை நான் தான் கடத்தி, விஷம் வைத்து கொன்று ஆற்றில் உடலை தூக்கி எரிந்து விட்டேன் என குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், கடந்த 2001-ஆம் ஆண்டு தனது மூத்த சகோதரரை இதே போல  கொன்றதாகவும், அதன் பின் சில மாதங்களுக்கு பின்பாக அவருடைய 8 வயது மகளை விஷம் வைத்துக் கொன்றதாகவும், மூன்று வருடங்களுக்கு முன்பதாக அவருடைய மூத்த மகளை கொன்றதாகவும், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பதாக மூத்த சகோதரரின் மகன் நிஷாவை கொன்றதாகவும் கூறியுள்ளார்.

தனது குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் தனது சொத்தை பிரித்து கொடுக்க மனம் இல்லாததால் இவ்வாறு கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து குற்றவாளியின் வாக்குமூலத்தை ஆடியோவாக பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளியை கைது செய்ததுடன் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

13 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

14 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

15 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

15 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

16 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

17 hours ago