பக்தர்களின் சரண கோஷங்கள் முழங்க… சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை.!

Published by
மணிகண்டன்

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் (நவமபர்) 16ஆம் தேதி மாலையில் நடை திறக்கப்பட்டது. நவம்பர் 17, கார்த்திகை 1ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அன்றிலிருந்து சரியாக 41 நாள் ஒரு மண்டலம் கழித்து இன்று (டிசம்பர் 27) மார்கழி மாதம் 11ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  மண்டல பூஜை நிகழ்வுக்காக இன்று அனுமதி பெறும் பக்தர்களின் எண்ணிக்கையானது 70 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

மண்டல பூஜைக்கு தயாராகும் சபரிமலை.! மீண்டும் எப்போது நடை திறப்பு.?

மண்டல பூஜை நடைபெறுவதை ஒட்டி, நேற்று திருவிதாங்கூர் மகாராஜா சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தானமாக அளித்த 450 சவரன் எடையுள்ள தங்க அங்கி மலை பாதை வழியாக நேற்று சபரிமலைக்கு கொண்டுவரப்பட்டது. தங்க அங்கி கொண்டு வருவதை ஒட்டி நேற்று பிற்பகல் முதல் மாலை வரையில் மலை பாதையில் பக்தர்கள் வர அனுமதிக்கப்படவில்லை. நேற்று மாலை 6.30 மணிக்கு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதன் பிறகு 11 மணி வரை பக்த்ர்கள் தரிசனத்திற்காக நடை திறந்து இருந்தது.

இன்று மண்டல பூஜை தினத்தன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தற்போது சபரிமலையில், பகதர்கள் சரண கோஷங்கள் விண்ண பிளக்க மண்டல பூஜை விழா தொடங்கியுள்ளது. தற்போது பக்கதர்களுக்கு இன்று மதியம் 1.30 மணிவரையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதன் பிறகு பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்ட்டு இரவு 11.30 மணி வரையில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர்.

மண்டல பூஜை முடிந்து இன்று இரவு 11.30மணிக்கு நடை சாத்தப்பட்டு, மீண்டும் மகர விளக்க பூஜைக்காக ஜனவரி 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்படும். ஜனவரி 31 முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். அதுக்கடுத்து ஜனவரி 20 ஆம் தேதி வரையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

 

Recent Posts

மதராஸி திரைப்படத்தின் முதல் பாடலான ”சலம்பல” ப்ரோமோ வெளியீடு.!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…

2 hours ago

“இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கினோம்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பிரதமர் விளக்கம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…

2 hours ago

நாளை விண்ணில் பாயும் ”நிசார்” செயற்கைக்கோள்.! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.!

ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…

3 hours ago

”இதற்குமேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது” – பிரதமர் மோடி.!

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…

4 hours ago

அதிபர் டிரம்பிடம் இதையெல்லாம் கேட்க முடியுமா? – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்.!

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…

4 hours ago

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.., வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…

5 hours ago