மன் கி பாத் நிகழ்ச்சியில்.. தமிழக பெண்மணிக்கு பாராட்டு.. பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

Published by
பாலா கலியமூர்த்தி

மலைவாழ் மக்களுக்காக ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை செய்து வரும் தமிழக பெண்மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சி பிரதமர் மோடி பாராட்டு.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவது வழக்கம். அதன்படி, இன்று 79ஆவது மன் கி பாத் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, டோக்கியோ ஒலிம்பிக்கில் மூவர்ண கொடியை ஏந்தி இந்திய வீரர்கள் வலம் வந்தது பரவச உணர்வை ஏற்படுத்தியது. ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகளை சமூக ஊடகங்கள் மூலம் ஊக்குவியுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

கார்கில் வெற்றி தினமான நாளை இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதையை செலுத்தவும் வலியுறுத்தினார். பின்னர் 2011ம் ஆண்டுக்கு பிறகு காதியில் விற்பனை பெருமளவு அதிகரித்துள்ளது. ஊரகப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ஆடைகளை வாங்கி அணிய வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்பின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தது வரும் சாமானிய மக்களை குறிப்பிட்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது, நீலகிரி மாவட்டம் குன்னுரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடங்கிய ராதிகா சாஸ்திரிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மலைவாழ் மக்களுக்காக ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை செய்து வருவதாக ராதிகாவை பாராட்டினார். பணியில் இருந்துகொண்டே சமூக சேவையிலும் ஈடுபடலாம் என்பதற்கு ராதிகா சாஸ்திரி ஒரு உதாரணம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் ஐஐடியில் 3டி பிரின்டிங் தொழில் நுட்பத்தில் வீடு கட்டுமானம் செய்த மாணவர்கள் பற்றியும் குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கமல் விவகாரம்: ”நாம் எதிரிகள் அல், நாம் அண்டை மாநிலத்தவர்கள்” – டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்.!

கமல் விவகாரம்: ”நாம் எதிரிகள் அல், நாம் அண்டை மாநிலத்தவர்கள்” – டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்.!

கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், ​​"கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…

8 hours ago

பிரதமர் மோடி தலைமையில் நாளை மறுநாள் (ஜூன் 4) மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்.!

டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி…

9 hours ago

ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.!

டெல்லி : ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில்…

10 hours ago

12 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலகக் கோப்பை.! மகளிர் ஒருநாள் தொடர் அறிவிப்பு.!

டெல்லி : இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி)…

10 hours ago

சிக்கிமில் திடீர் நிலச்சரிவு! 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு! மாயமான 6 வீரர்களின் நிலை?

சிக்கிம் : வடக்கு சிக்கிமில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, நிலைமை மிகவும் மோசமாகி, லோச்சன் மற்றும் லாச்சுங்…

11 hours ago

ஒரே நாளில் ஓய்வை அறிவித்த 2 அதிரடி வீரர்கள்.! எந்த போட்டியில் இருந்து தெரியுமா?

பிரிட்டோரியா : இன்று ஜூன் 2 (திங்கட்கிழமை) ஒரே நாளில் கஹென்ரிச் கிளாசென் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்லும்…

11 hours ago