திருமணங்கள் எந்தந்த காரணங்களுக்காக எல்லாம் நடைபெறாமல் போனதை கேள்விபட்டு இருப்போம் ஆனால் மணப்பெண்ணின் சோலை பிடிக்கவில்லை என்று மணமகன் மண்டபத்திலிருந்து ஓட்டம் பிடித்த நிகழ்வு நடந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹாசன் என்ற கிராமத்தில் தான் இச்சம்பவம் ஆனது நடந்துள்ளது.இதே கிராமத்தை சேர்ந்த பி.என்.ரகுமார் மற்றும் பி.ஆர்.சங்கீதா இருவரும் . கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்து உள்ளனர். இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் சம்மதிக்கவே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்தகாதல் ஜோடிக்கு நேற்றுமுன் தினம் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்காக பெண் வீட்டார் சார்பில் மணப்பெண்ணிற்காக சேலை எடுத்துள்ளனர் ஆனால் அவர்கள் எடுத்த சேலை தரமாக இல்லை அதனை மாற்ற வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் கூறியதாகவும் ஆனால் இதனை பெண்வீட்டார் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.பெண் வீட்டார் மீது கோபமடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு முதல் நாள் திருமண மண்டபத்திலிருந்து கூண்டோடு ஓட்டம் பிடித்து உள்ளனர்.மாப்பிள்ளை வீட்டாரை தேடிய பார்த்த பெண் வீட்டார் சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஒரு சேலைக்காக காதலித்து கரம் பிடிக்கும் நேரத்தில் திருமணம் நின்றது. இதனால் மனஉளைச்சல் அடைந்த .. பெண் வீட்டார் மாப்பிள்ளை மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…