மனைவி இறந்த மருத்துவமனை கழிவறையில் தாய் உடல் மீட்பு.!

Published by
murugan

மகாராஷ்டிராவை சார்ந்த ஒரு நபரின் மனைவி இறந்த மருத்துவமனையின் கழிவறையில், அவரின் தாய் உடல் மீட்கப்பட்டது.

மகாராஷ்டிராவின் ஜல்கான் பகுதியை சார்ந்த ஒரு நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், அவரை பூசாவலில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைக்கப்பட்டு சிகிக்சை பெற்று  வீடு திரும்பினார். பின்னர், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஜல்கான் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், அந்த மருத்துவமனை  ஐ.சி.யூ வார்டில் படுக்கை இல்லாதால் ஆறு மணி நேரம் காத்திருந்ததால் அந்த நபரின் மனைவி ஜூன் 2-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை மனைவி உயிரிழந்த அதே மருத்துவமனையில் உள்ள ஒரு கழிப்பறையில் இருந்து அந்த நபரின் தாய் உடல் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

82 வயதான அந்த நபரின் தாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பூசாவல் ரயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஜல்கான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, அந்த நபர் தன் தாயை பற்றி மருத்துவமனையில் விசாரிக்க தன் உறவினர்களை அழைத்து சென்று மருத்துவமனையில் விசாரித்தார். ஆனால், அவரின் தாய் பெயரில் யாரும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில் தான் மருத்துவமனை வார்டில் இருந்த மற்ற நோயாளிகள் கழிவறையில் இருந்து துர்நாற்றம் வருவதாக புகார் கொடுத்தனர். இந்த புகார் அடைப்படையில் கடந்த புதன்கிழமை மருத்துவமனை ஊழியர்கள் கழிவறை கதவைத் உடைத்து திறந்தபோது உடல்  சிதைந்த நிலையில் அந்த நபரின் தாய் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக உடல் கண்டுபிடிக்கப்பட்ட கழிவறையை அந்த மருத்துவமனையில் இருந்த ஊழியர்களும் , அங்குள்ள நோயாளிகளும்  திறக்கவோ இல்லை என கூறப்படுகிறது. ஆனால், உடல் மீட்கப்பட்ட கழிவறையில் உட்பக்கம் தாழ் போடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக டாக்டர் பி எஸ் கைர் உட்பட மருத்துவமனையின் 5 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்விச் செயலாளர் சஞ்சய் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…

12 minutes ago

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

10 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

11 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

12 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

12 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

13 hours ago