150 லாரி ஓட்டுனர்களை தனது வீட்டிற்கு வரவழைத்து விருந்து படைத்த மீரா பாய் சானு…!

Published by
Rebekal

தனது கடினமான காலங்களில் உதவியதற்காக 150 லாரி ஓட்டுனர்களுக்கு தனது வீட்டில் வைத்து மீரா பாய் சானு விருந்து படைத்துள்ளார்.

மணிப்பூர் மாநிலம் இம்பால் பகுதியில் உள்ள நோங்போங் கக்சிங் எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த வீட்டின் கடைக்குட்டி தான் மீராபாய் சானு. இவர் தனது சிறு வயது முதலே மிக கடுமையான வறுமையை கடந்து வந்துள்ளார். தனது பள்ளிப்படிப்பை வறுமையிலேயே கடந்து வந்த இவர், பளு தூக்குவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்துள்ளார். எனவே, அது தான் தனது எதிர்காலம் என நினைத்து பளு தூக்கும் முயற்சியில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

ஆனால், இவர் பளு தூக்கும் பயிற்சி பெறக்கூடிய பயிற்சி மையம், இவரது கிராமத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருந்துள்ளது. இந்த பயிற்சி மையத்துக்கு செல்வது பெரும் சவாலாக இருந்துள்ளது. இந்த கடினமான காலகட்டத்தில் தனது கிராமத்தின் வழியே இம்பால் நகருக்கு மணல் ஏற்றிக் கொண்டு செல்லக்கூடிய லாரிகளில் அனுமதி கேட்டு தான் இவர் இலவசமாக பயணம் செய்து வந்துள்ளார். பல வருடங்களாக அந்த லாரி ஓட்டுனர்கள் மீராபாய் சானுவுக்கு இலவசமாக பயணம் வழங்கியுள்ளனர். இவர்கள் வழங்கிய இலவச பயணம் மூலமாகத்தான் மீராபாய் சானு தனது பயிற்சியை தொடர்ந்துள்ளார்.

மேலும் அதன் மூலம் சேமித்த பணத்தை வைத்து தனது டயட் செலவுகளை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தற்பொழுது டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள மீராபாய் சானு தனக்கு உதவிய லாரி ஓட்டுனர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் லாரி ஓட்டுனர்கள் மற்றும் க்ளீனர்கள் உட்பட 150 பேரை தனது வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு உணவு பரிமாறி விருந்து படைத்துள்ளார்.

மேலும் இது குறித்து பேசிய மீராபாய் சானு, வீட்டில் இருந்து தனது பயிற்சி மையத்திற்கு செல்வதற்கு இலவசமாக பயணம் வழங்கிய லாரி ஓட்டுனர்கள் அனைவரது ஆசீர்வாதத்தையும் தான் பெற விரும்பியதாக கூறியுள்ளார். மேலும், எனது கடினமான காலங்களில் அவர்கள் எனக்கு மிகவும் உதவினார்கள். எனவே அவர்களுக்கு இப்போது என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதற்கு நான் காத்திருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு இந்த கடினமான காலகட்டத்தில் உதவிய அனைவரையுமே தனிப்பட்ட முறையில் சந்தித்து நன்றியை தெரிவிக்க முயற்சித்து வருகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

16 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

17 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

17 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

18 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

18 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

19 hours ago