செப். 7 முதல் டெல்லியில் மெட்ரோ சேவைகள்..டோக்கன்களுக்கு பதில் ஸ்மார்ட் கார்டுகள்!

Published by
Surya

டெல்லியில் செப். 7 முதல் மெட்ரோ சேவைகள் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு, மே 31- ம் தேதி வரை கடுமையாக இருந்தது. அதன்பின், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு, ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது.

தற்பொழுது 3 -ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இது இன்றுடன் நிறைவடையும் நிலையில், மத்திய அரசு, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதில் இந்தியாவில் மெட்ரோ ரயில் சேவைகள், செப். 7- ம் தேதி முதல் தொடங்கும் என தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் 22- ம் தேதி முதல் நிறுத்தப்பட்ட டெல்லி மெட்ரோ ரயில் சேவைகள், செப். 7 முதல் தொடங்கும் என அம்மாநில போக்குவரத்துக்குத்துறை அமைச்சர் கைலாஷ் காகோல்ட் தெரிவித்த நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

முகக்கவசம் அணிவது கட்டாயம்:

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கு வெப்பபரிசோதனை செய்யப்படும். பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம். மீறுபவருக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், மெட்ரோ நிலையத்திலும் சானிடைஸர் வைக்கப்படும்.

டோக்கன் கிடையாது:

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு டோக்கன்கள் வழங்கப்படாது. அதற்கு பதில், ஸ்மார்ட் கார்டு அடிப்படையிலான டிக்கெட் விநியோகிக்கப்படும். ஒவ்வொரு நிலையத்திலும் ஸ்மார்ட் கார்டுகளை வாங்குவதற்கான வசதி இருக்கும். மேலும் அந்த ஸ்மார்ட் கார்டுகளை ரீசார்ஜ் செய்வதற்கான டிஜிட்டல் முறைகளும் செயல்படுத்தப்படும்.

மெட்ரோவில் சமூக இடைவேளை:

ரயிலில் பயணிக்கும் பயணிகள், ஒவ்வொரு பயணிகளுக்கு இடையில் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். குறிப்பாக, இருக்கைகள் அமைக்கப்படும். பயணிகளை கண்காணிக்க, டெல்லி மெட்ரோ பணியாளர்கள், சிவில் பணியாளர்கள் அமர்த்தப்படுவார்கள். மேலும், புதிய வழிகாட்டுதலின்படி, ரயிலில் உள்ள ஏர் கண்டிஷனர் (ஏசி) இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Published by
Surya

Recent Posts

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

3 minutes ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

58 minutes ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

2 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

10 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago