பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்வதாகவும், சமூகநீதி,அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும்,அதிமுக கட்சி நிறுவன தலைவருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 105-ஆவது பிறந்த நாள் இன்று (ஜனவரி 17 ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது.மேலும், எம்.ஜி.ஆர். மாளிகையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு,ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திஇன்று ,இனிப்பு வழங்குகின்றனர்.
அதே சமயம்,தமிழக அரசு சார்பில் சென்னை கிண்டி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர்கள்,எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் இன்று மரியாதை செலுத்துகின்றனர்.
இந்நிலையில்,பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன் எனவும்,சமூகநீதி,அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக,பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் கூறியுள்ளதாவது:
“பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி,அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார்.அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன.
மேலும்,அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது’,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…