கோவாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் இயங்கி வருகிறது. இந்த விமானம் நேற்று இரவு வழக்கம் போல கோவாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது .அப்போது இந்த விமானத்தில் கோவா மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நிலேஷ் கேப்ரியல் மற்றும் அவரது அலுவலக அதிகாரிகள் உட்பட 180 பேர் பயணம் செய்தனர்.
விமானம் கோவாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இடதுபக்க இன்ஜின் தீப்பிடித்தது. இதை பார்த்த பயணிகள் அலறினர். பின்னர் விமானி தீப்பிடித்து எஞ்சினை அணைத்து விட்டு மற்றொரு இன்ஜின் மூலமாக மீண்டும் கோவாவிற்கு விமானத்தை திருப்பினார்.வ
கோவாவில் விமானம் பத்திரமாக தரை இறங்கியது.இதனால் பயணிகள் எந்தவித சேதமும் இல்லாமல் தப்பித்தனர். இதுபற்றி இதுபற்றி அமைச்சர் நிலேஷ் கூறுகையில் , இடது பக்கம் இன்ஜின் தீப்பிடித்ததை பார்த்துபயணிகள் பதறினர். ஆனால் விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
நாங்கள் வேறு ஒரு விமானம் மூலமாக டெல்லி செல்ல உள்ளோம் என கூறினார். இந்த சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…