தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி வழங்கும் செல்போன் செயலியை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கிவைத்தார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் பள்ளிகள் , கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது.இதன் விளைவாக பள்ளி , கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக படங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி வழங்க செல்போன் செயலி ( Directorate General National Cadet Corps Mobile Training App )ஓன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி வழங்கும் செல்போன் செயலியை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கிவைத்தார்.டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலமாக நடைபெற்று நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் தேசிய மாணவர் படை வீரர்களிடம் கலந்துரையாடினார்.அப்பொழுது அவர்களிடம் கூறுகையில்,மாணவர்கள் அனைவரும் சிறந்த எதிர்காலத்தை அடைவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறன். கொரோனாவால் மாணவர்கள் நேரடியாக பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பு இல்லாத நேரத்தில் டிஜிட்டல் முறையிலான கற்பித்தால் அவர்களுக்கு பயனளிக்கும் என்று தெரிவித்தார்.எத்தகைய சவாலையும், உறுதிப்பாடு மற்றும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு சாதனைபடைக்க முடியும்.கொரோனா பரவி வரும் சமயத்தில் முன்கள பணியாளர்களுக்கு பல்வேறு நிலைகளில் உறுதுணையாக செயல்பட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படையினருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்.
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…