மிசோரம் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.லால்சிலியானா அவர் சிகிச்சை பெற்று வந்த அறையை, அவரே சுத்தம் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மிசோரம் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.லால்சிலியானா தனது மனைவி மற்றும் மகனுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், COVID-19 மருத்துவமனையான சோரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறனர். இவர் சிகிச்சை பெற்று வரும் மாடியை துடைத்து சுத்தம் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் சிகிச்சை பெற்று வரும் அறையை சுத்தம் செய்வதற்காக துப்புரவாளரை அழைத்துள்ளார். ஆனால் அவர் வர முடியாத காரணத்தினால் அவரே துடைத்துள்ளார். இவர் சுத்தப்படுத்தும் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து அவர் கூறுகையில், வீட்டு வேலைகளை செய்வது எனக்கு புதிய வேலை அல்ல. வீட்டில் மட்டுமல்லாமல், பிற இடங்களிலும் அவ்வாறு செய்ய வேண்டி இருக்கும் போது நான் அதை செய்வேன் என தெரிவித்துள்ளார்.
மே-8ம் அவரது மகனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட பின் அவரது மனைவியும் அவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர். பின் மே 11-ஆம் தேதி அவர்கள் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மே-12ஆம் தேதி லால்சிலியானாவிற்கு ஆக்சிஜன் அளவு திடீரென வீழ்ச்சி அடைந்தது. பின் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டது.
லால்சிலியானா இதுகுறித்து கூறுகையில், நாங்கள் இங்கே நன்றாக இருக்கிறோம். மருத்துவ ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் நன்றாக கவனித்துக் கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…