ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு இரண்டு கோடி செலவில் மதுசூதன் ரெட்டி எனும் எம்.எல்.ஏ கோவில் ஒன்றை காட்டியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் அம்மாநிலத்தில் நல்லாட்சி புரிந்து வரும் நிலையில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் ஆட்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் வரலாற்றிலேயே முதன்முறையாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி என்பவரால் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இரண்டு கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த ஜெகன்னா நவரத்தினா கோவில் நேற்று திறக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் இருக்கக்கூடிய பணியாளர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வழிவகை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கோவில் தங்கம் மற்றும் வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் கூட செப்பு இலைகள் மீது பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த கோவிலுக்கு வருவோருக்கு ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் செய்த நல திட்டங்கள் குறித்த கையடக்க பிரதிநிதிகளும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முதல்வர் ஒருவருக்கு இத்தனை பிரமாண்டமாக 2 கோடி செலவில் கோவில் கட்டப்பட்டுள்ள சம்பவம் பலரையும் பிரமிப்படைய செய்துள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…