இந்தியாவில் எல்லாரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை விரைவில் தாக்கும் என்றும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் முதலாவது மற்றும் இரண்டாவது கொரோனா அலை மிகவும் மோசமாக காணப்பட்டது. மத்திய அரசு இந்த இரண்டு அலைகளையும் சரியாக கட்டுப்படுத்தவில்லை. இதில் மத்திய அரசின் நடவடிக்கைகள் மோசமாக காணப்பட்டது.எனவே, முதல் இரண்டு அறைகளில் நாம் எங்கெல்லாம் தவறு செய்தோமோ, அதையெல்லாம் சரி செய்து கொள்ள வேண்டும்.
மேலும் அவர் கூறுகையில் மத்திய அரசை குற்றம் சாட்டுடுவதற்காக வெள்ளை அறிக்கையை வெளியிடவில்லை. மூன்றாம் அலையை கட்டுப்படுத்த வெள்ளையறிக்கை உதவியாக இருக்கும் என்றும், மூன்றாம் அலை இந்தியாவைத் தாக்கும் என்பது மொத்த நாட்டுக்கே தெரியும் என தெரிவித்துள்ளார்.
மூன்றாம் அலை தோன்றிய பின்னும் இந்தியாவில்,புதிய அலை தோன்றலாம். நேற்று அதிகமானோர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். நேற்று தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்றுள்ளது. மாநிலங்களுக்கிடையே எந்தவித வேறுபாடும் காட்டாமல், அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான அளவு தடுப்பூசி மத்திய அரசு வழங்க வேண்டும்.
மேலும் அவர் கூறுகையில், இந்தியாவில் எல்லாரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாவது அலையில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுள்ளது. மோடியின் கண்ணீர் மூன்றாவது அலையில் மக்களை காக்காது. ஆனால் ஆக்சிஜன் இப்போதே தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது என தெரிரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…