கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 01-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 05-ம் தேதி தாமதமாக தொடக்க வாய்ப்பு உள்ளது.
அந்தமான், நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி காணப்படும். இந்த அறிகுறிகள் கொண்டு தான் கேரளாவில் பருவமழை தொடங்கும். வழக்கமாக இந்த அறிகுறி மே மாதம் 20-ம் தேதிக்கு மேல் உருவாகும்.
ஆனால் இந்த ஆண்டு 6 நாட்களுக்கு முன்பே அந்தமான், நிகோபார் தீவுகளில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இதனால், கேரளாவில் ஜூன் 1-ம் தேதி பருவ மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறிய நிலையில், கேரளாவில் தாமதமாக தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 01-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 05-ம் தேதி தாமதமாக தொடக்க வாய்ப்பு உள்ளது. இதனால், கேரளாவில் தென்மேற்கு பருவமழை 4 நாள்கள் தாமதமாக தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை தென் கிழக்கு வங்கக்கடலில் ஆம்பன் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. ஆம்பன் புயலால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காற்றின் ஈர்ப்பால் அங்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…