கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 01-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 05-ம் தேதி தாமதமாக தொடக்க வாய்ப்பு உள்ளது.
அந்தமான், நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி காணப்படும். இந்த அறிகுறிகள் கொண்டு தான் கேரளாவில் பருவமழை தொடங்கும். வழக்கமாக இந்த அறிகுறி மே மாதம் 20-ம் தேதிக்கு மேல் உருவாகும்.
ஆனால் இந்த ஆண்டு 6 நாட்களுக்கு முன்பே அந்தமான், நிகோபார் தீவுகளில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இதனால், கேரளாவில் ஜூன் 1-ம் தேதி பருவ மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறிய நிலையில், கேரளாவில் தாமதமாக தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 01-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 05-ம் தேதி தாமதமாக தொடக்க வாய்ப்பு உள்ளது. இதனால், கேரளாவில் தென்மேற்கு பருவமழை 4 நாள்கள் தாமதமாக தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை தென் கிழக்கு வங்கக்கடலில் ஆம்பன் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. ஆம்பன் புயலால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காற்றின் ஈர்ப்பால் அங்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…