ஸ்ட்ராபெர்ரி பழ வண்ணத்தில் சந்திரன்.! நள்ளிரவு 11.15 மணியளவில் தோன்றும் கிரகணத்தின் ஸ்பெஷல்.!

Published by
Ragi

இன்று நள்ளிரவில் நிகழவுள்ள சந்திர கிரகணத்தில் சந்திரன் ஸ்ட்ராபெர்ரி பழ வண்ணத்தில் தெரியும் என்று கூறப்படுகிறது.

2020ல் நிகழும் 2வது சந்திர கிரகணம் இன்று நள்ளிரவில் நிகழவுள்ளது. இந்த சந்திர கிரகணத்திற்கு ‘பெனம்ரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் வருகையில் பூமி நிலாவின் மீது சூரிய ஒளி படாமல் மறைக்கும். ஆனால், இன்று நிகழும் சந்திர கிரகணத்தில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இருப்பதில்லை. கிரகணம் உச்சம் அடையும் நேரத்தில், பூமியின் நிழலின் வெளிப்பகுதி என்ற புறநிழல் சந்திரன் மீது விழுகிறது. அப்போது, சந்திரன் ஸ்ட்ராபெர்ரி பழ வண்ணத்தில் தெரியும் என்று கூறப்படுகிறது.

சுமார் 3 மணி நேரம் 18 நிமிடங்கள் நீடிக்கும் இந்த சந்திரகிரகணம் இந்திய மற்றும் இல‌ங்கை நேரப்படி 5 ஆம் தேதியான இன்று நள்ளிரவு 11.15 மணி முதல் அதிகாலை 2.34 மணி வரை தெரியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சந்திர கிரகணத்தை ஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களிலும், இந்தியாவில் தெளிவான வானிலை இருந்தால் மட்டுமே பார்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இந்தியாவில் இதனையடுத்து ஜூலை 5 ஆம் தேதி மற்றும் நவம்பர் 30 ஆம் தேதிகளில் சந்திரகிரகணம் இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் 10ம் தேதி ‘புறநிழல் நிலவு மறைப்பு’ என்ற சந்திர கிரகணம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக இந்த ஆண்டில் நான்கு முறை சந்திர கிரகணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago