கேரளாவில் கடந்த 10 நாட்களில் மட்டும் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் கேரளாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் கேரளாவில் கடந்த 10 நாட்களில் மட்டும் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய 1000-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரள அரசின் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் டி என் சுரேஷ் அவர்கள் கூறுகையில், நாளுக்கு நாள் மாநிலத்தில்கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும், தற்போது வரை 4.5 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதில் அதிகபட்சமாக சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த பத்து நாளில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு தொற்று பரவியுள்ளதால் பாதிப்பு 7.56 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 5,978 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…
சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…
சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…
சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830…
கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…
மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…