கடந்த நான்கு மாதங்களில் இந்தியா 18,006 டன் கொரோனா மருத்துவ கழிவுகளை உற்பத்தி செய்துள்ளது.
அதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,587 டன் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவு தெரிவிக்கிறது. செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் சுமார் 5,500 டன் கொரோனா கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டன. இது, ஒரு மாதத்திற்கு அதிகபட்சம்.
மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, ஜூன் முதல், அனைத்து மாநிலங்களும் 18,006 டன் கொரோனா தொடர்பான உயிரியல் மருத்துவக் கழிவுகளை உற்பத்தி செய்துள்ளன. அவை, பொதுவாக உயிரியல் கழிவு சுத்திகரிப்பு வசதிகளால் சேகரிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றன.
கொரோனா மருத்துவ கழிவுகள்:-
கொரோனா கழிவுகளில் பிபிஇ கருவிகள்,முகக்கவசங்கள், கையுறைகள், பிபிஇ கிட் போன்ற , காட்டன் ஸ்வாப்ஸ், இரத்தம் அல்லது உடல் திரவத்தால் மாசுபட்ட படுக்கைகள், இரத்த பைகள், ஊசிகள், சிரிஞ்ச்கள் ஆகியவை அடங்கும்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய தரவுகளின்படி:-
ஜூன் முதல் நான்கு மாதங்களில் மகாராஷ்டிராவில் 3,587 டன் கொரோனா கழிவுகளை உற்பத்தி செய்தது, அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு (1,737 டன்), குஜராத் (1,638 டன்), கேரளா (1,516 டன்), உத்தரபிரதேசம் (1,432 டன்), டெல்லி ( 1,400 டன்), கர்நாடகா (1,380 டன்), மேற்கு வங்கம் (1,000 டன்) உள்ளன.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…