கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக இந்தியாவில் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 87 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டு போடப்பட்டு வந்தாலும், புதியதாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 1,08,80,603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,05,89,230 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் தவிர 1,55,447 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக இந்தியாவில் 9,309 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 87 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 1,35,926 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…