நான்காவது திருமணத்திற்கு தடையாக இருந்த தன் மகனை குளத்தில் மூழ்கடித்து தாய் கொலை செய்தார்.
பிகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தர்மசீலா தேவி (வயது 23) இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அருண் என்பவரை திருமணம் செய்தார்.இந்த தம்பதிகளுக்கு பார்வையற்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் திருமணமாகிய ஒரே வருடத்தில் கணவரைப் பிரிந்து வேறொரு நபரை திருமணம் செய்தார் தேவி. 2வது திருமணம் செய்த அவர் திடீரென்று உயிரிழந்ததால் தேவி மகேஷ் செளதிரி என்பவரை 3வதாக மணந்தார். ஆனால் அவரும் ஒரு விபத்தில் உயிரிழந்தார்.
இதை அடுத்து, நான்காவதாக திருமணம் செய்து கொள்ள நினைத்த தேவி, தனது 4 வயது மகனை அருகில் உள்ள குளத்தில் மூழ்கடித்து அந்த பார்வையில்லாத பிஞ்சை நெஞ்சில் கொஞ்சமும் கருணையின்றி கொலை செய்து உள்ளார்.
இந்நிலையில் முதல் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை தேவியை கைது செய்து விசாரித்ததில், குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதாக காவல் அதிகாரி அமரேந்திர குமார் தகவல் தெரிவித்தார்.இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…