மகனை கருணை கொலை செய்ய அனுமதி கோரி மனு அளித்த 2 மணி நேரத்தில் நிகழ்ந்த பரிதாபம்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சவுதபெள்ளி மண்டலில் உள்ள பிர்ஜெபள்ளி கிராமத்தில் வசித்து வரும் ஒரு தம்பதியினருக்கு, அரிய வகை இரத்த நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் உள்ளார். அவர்களது மகனுக்கு பெயர் ஹர்ஷ்வர்தன் (9).
ஹர்ஷவர்தனுக்கு நான்கு வயதாக இருந்தபோது, ஏழை தம்பதியினர் தங்கள் மகனுக்கு ரத்தம் தொடர்பான ஒரு அரிய வகை நோய் இருப்பதை அறிந்து கொண்டனர். அந்த சிறுவனுக்கு பல சிகிச்சைகள் மேற்கொண்ட போதிலும், அவரது உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை. மேற்கொண்டு சிகிச்சை மேற்கொள்ள அந்த ஏழை தம்பதியினர் ரூ.4 லட்சம் கடன் வாங்க வேண்டியிருந்தது.
இந்நிலையில், அந்த சிறுவனின் தாய் அருணா, புங்கனூர் நீதிமன்றத்தில் தனது மகனை கருணை கொலை செய்ய அனுமதி கோரி ஒரு மனுவை அளித்தார். அந்த மனுவில், அரசாங்கம் தனது மகனை கவனித்துக் கொள்ள வேண்டும் அல்லது அவரது கருணைக் கொலைக்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், துரதிர்ஷ்டவசமாக, மனுவைத் தாக்கல் செய்த இரண்டு மணி நேரத்திற்குள், சிறுவன் நீதிமன்றத்திலிருந்து கிராமத்திற்குச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…